மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி |
'கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்காக 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். சிம்பு அவ்வளவு சம்பளத்தைக் கேட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே வாங்கிய சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்திற்குப் பின் தனக்கு யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அவர்களது படத்தில் நடிக்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். சிம்புவிற்கு மட்டுமே 40 கோடியைக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 60 கோடியில் எப்படி சரித்திரப் படத்தைத் தயாரிக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.