ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவருக்கு 15 வயதில் சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனா, மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். தற்போது இருவரும் செலிபிரேட்டியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் அர்ச்சனா தன் மகளுடன் சேர்ந்து அளித்த பேட்டியில் தன் காதலை மீட்டெடுக்க சாரா உதவியதை கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த பேட்டியில் 'ஒரு மாதத்திற்கு முன் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். அப்போது எங்கள் மகள் தான் இருவரையும் உட்கார வைத்து பேசினாள். நீங்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று கேட்டாள். அதன்பின் நாங்கள் எங்கள் தவறை உணர்ந்தோம். தற்போது மீண்டும் கடந்த 15 நாட்களாக 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தோமோ அப்படி காதலித்து வருகிறோம்' என்று கூறியுள்ளார். வைரலாகும் இந்த பேட்டியை பார்க்கும் பலரும் பெற்றோரை மீண்டும் சேர்த்து வைத்த சாராவின் மெச்சூரிட்டியை பாராட்டி வருகின்றனர்.