உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
போக்கிரி படத்தில் நடித்தபோது விஜய்யுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக அவரிடத்தில் பேச்சு வார்த்தையே இல்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் நெப்போலியன். சமீபகாலமாக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், போக்கிரி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த போது ஒரு சம்பவம் நடந்தது. அதன் காரணமாக அப்போதில் இருந்து நானும், விஜய்யும் பேசிக் கொள்வதில்லை.
அவர் நடித்த படங்களையும் நான் பார்ப்பதில்லை. ஆனால் மீண்டும் விஜய்யுடன் பேசுவதற்கு நடிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் அவர் என்னுடன் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். காரணம் அவர் தனது தாய் தந்தையர் இடத்திலேயே பேசாமல் இருக்கிறார். அமெரிக்கா வரை அந்த செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் முதலில் விஜய் தனது அப்பா அம்மாவுடன் சமரசமாகட்டும். மேலும் எனக்கும் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவ்வளவு இடைவெளிக்கு பிறகு அவர் என்னுடன் மீண்டும் பேச தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் நெப்போலியன்.