தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் | யஷ் படத்திலிருந்து கரீனா கபூர் விலகல்? | அண்ணாமலை பயோபிக் : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆர்வம் | ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் |
தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் வெளியான காட்ஷில்லா, அவதார் போன்ற படங்களில் பணியாற்றிய டிஜிட்டல் நிறுவனமே இந்த வாடிவாசல் படத்திற்கும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெற்றி மாறன் விடுதலை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டதால் இந்த வாடிவாசல் படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். அதனால் சூர்யா தனது 42வது படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் உடனடியாக வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாம். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை எஸ். தாணு தயாரிக்கிறார்.