ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாக நடந்து வருகிறார். இப்படி சோகத்தில் இருந்துவரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள 'டெல் இட் லைக் எ உமன்' என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள அப்ளாஸ் என்கிற பாடல் 95 வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், “இந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆஸ்கர் விருதுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. 'டெல் இட் லைக் எ உமன்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. மேலும் இதே பிரிவில் போட்டிக்கு தேர்வாகியுள்ள நாட்டு நாட்டு பாடலின் வெற்றிக்காக ஆர்ஆர்ஆர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.




