ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

ஆஸ்கர் விருதுக்காக ஆண்டு தோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படம் 'செல்லோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) என்கிற குஜராத்தி படம். சினிமா தற்போது டிஜிட்டலில் திரையிடப்படுகிறது. முன்பு பிலிமில் திரையிடப்பட்டது. திரையிடும் கருவியான புரொஜக்டர் மீதும், பிலிம் மீதும் நேசம் கொண்ட ஒரு சிறுவனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. பான் நலின் இயக்கி இருந்தார்.
இந்த படம் ஆஸ்கர் விருதில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் பான் நலின் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதவாது: என்னுடைய சினிமா குடும்பத்தினரே... மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம். ஒரு குழுவாக நீங்கள் மிகவும் அற்புதமான செயல்பட்டீர்கள். பல்வேறு தடைகளிலும் நீங்கள் நம் கதையின் பக்கமே உறுதியாக இருந்தீர்கள். அதுதான் உலகெங்கிலும் உள்ளவர்களின் இதயங்களை கவர்ந்தது. ஏனென்றால் படத்தை எடுக்கும்போது நம் அனைவருக்குமே தெரியும் இது கடைசி படமாகவோ, கடைசி காட்சியாகவோ இருக்காது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.