39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்சும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது குறித்து எஸ் .ஜே .சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், என்ன ஒரு கான்செப்ட். என்ன ஒரு செட். என்ன ஒரு போட்டோகிராபி. என்ன ஒரு பிரம்மாண்டம். என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள எஸ் .ஜே .சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் பார்த்த அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிமிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.