ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

2014ம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வெளியான படம் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் அவர் இயக்கி வருகிறார். இதில் நாயகனாக ராகவா லாரன்சும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 36 நாட்களில் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது குறித்து எஸ் .ஜே .சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், என்ன ஒரு கான்செப்ட். என்ன ஒரு செட். என்ன ஒரு போட்டோகிராபி. என்ன ஒரு பிரம்மாண்டம். என்ன ஒரு தயாரிப்பு வேல்யூ, அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அளித்த கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ள எஸ் .ஜே .சூர்யா, ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் பார்த்த அற்புத உள்ளம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிமிஷா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.