நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
வாரிசு படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கினும் விஜய்- 67 வது படத்தில் தான் வில்லனாக நடித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் அவர் கூறுகையில், இப்போதுதான் விஜய்யின் 67வது படத்தில் அவருடன் இணைந்து நடித்துவிட்டு வருகிறேன். இதற்கு முன்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நடித்த யூத் படத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பிறகு இப்போதுதான் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்று விஜய் 67வது படத்தில் தான் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார் மிஷ்கின். அதோடு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் இந்த விஜய் 67 வது படத்தின் 6 வில்லன்களில் ஒருவராக நடிப்பதாக இன்னொரு புதிய தகவலும் வெளியாகியிருக்கிறது.