ஓராண்டாக நடந்த 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு : விரைவில் ரிலீஸ் அறிவிப்பு | இன்றும் டிரெண்ட்டில் நாட்டாமை ‛மிக்சர்' மாமா : யார் இவர்... - கேஎஸ் ரவிக்குமார் உடைத்த ரகசியம் | 27 ஆண்டுகளுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா | நேற்று 'மெய்யழகன்', இன்று 'வா வாத்தியார்' - கார்த்தி படங்களின் அப்டேட் | அமரன் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து அளித்த சிவகார்த்திகேயன் | மீண்டும் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா | சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் |
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரியோ ராஜ். அறிமுகமாகன நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, அதன்பிறகு நடித்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற இரு படங்களும் பெரிதாக கைகொடுக்காத நிலையில் தற்போது நடித்து வரும் படம் ஜோ. அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் அருளானந்து தயாரிக்கிறார்.
படம் குறித்து ரியோ ராஜ் கூறும்போது "கதையின் நாயகன் 'ஜோ'வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன்.
மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. பார்வையாளகளுக்கு ஒரு பீல் குட் லவ் ஸ்டோரியாக இந்த படம் இருக்கும்'' என்றார்.