மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
பாலிவுட்டில் 2018ல் ஷாருக்கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். முக்கியமான சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சிலர் இணைந்து பதான் படத்தின் மீதான கோரிக்கை ஒன்றை டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்திருந்தனர். அதில் பார்வையற்ற மற்றும் செவித்திறன் இழந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்த படத்தை பார்த்து ரசிக்கும்படியாக இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டின்போது சப் டைட்டில்கள் மற்றும் ஆடியோ விவரங்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த இந்த விஷயங்களை மேற்கொண்டு ஒடிடி தளத்தில் படத்தை வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த மாற்றங்களை வரும் பிப்ரவரி 20-க்குள் செய்து சென்சாருக்கு மீண்டும் அனுப்பும்படியும் மார்ச் 20-க்குள் சென்சார் சான்றிதழ் வழங்கும்படியும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.