முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |
'எதிர்நீச்சல்' தொடரில் அண்மையில் அருண் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சாணக்யன். முன்னதாக ஜீ தமிழின் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' தொடரில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இவரை பார்க்கும் நேயர்கள் பலரும் இவரை எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. சாணக்யன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் 'ஒரு காதல்', அஜித்துடன் 'பரமசிவன்' மற்றும் 'சக்கரவியூகம்' உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 'மெட்டி ஒலி' தான் சாணக்யனுக்கு முதல் சீரியல். இதை நடிகர் சாணக்யனே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் 'அந்த சின்ன பையனா இப்படி வளர்ந்துட்டார்?' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். தவிரவும் சாணக்யன் பிரபல சீரியல் நடிகை கீதா சரஸ்வதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.