ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

'எதிர்நீச்சல்' தொடரில் அண்மையில் அருண் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சாணக்யன். முன்னதாக ஜீ தமிழின் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' தொடரில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இவரை பார்க்கும் நேயர்கள் பலரும் இவரை எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. சாணக்யன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் 'ஒரு காதல்', அஜித்துடன் 'பரமசிவன்' மற்றும் 'சக்கரவியூகம்' உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 'மெட்டி ஒலி' தான் சாணக்யனுக்கு முதல் சீரியல். இதை நடிகர் சாணக்யனே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் 'அந்த சின்ன பையனா இப்படி வளர்ந்துட்டார்?' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். தவிரவும் சாணக்யன் பிரபல சீரியல் நடிகை கீதா சரஸ்வதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.