22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எப்போதும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஜன.,11) அதிகாலையிலேயே அஜித்தின் ‛துணிவு' படமும், விஜய்யின் ‛வாரிசு' படமும் வெளியானது.
இயக்குனர் எச்.வினோத் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில் தொடர்ந்து 3வது முறையாக வந்துள்ள ‛துணிவு'படம் நடுஇரவு 1 மணிக்கும், தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‛வாரிசு' படம் அதிகாலை 4 மணிக்கும் உலகம் முழுவதிலும் உள்ள திரையறங்குகளில் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனால் முதல் காட்சியை கண்டுகளித்த அஜித், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2014ல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் வீரம் மற்றும் விஜய்யின் ‛ஜில்லா' படங்கள் வெளியானது. 9 ஆண்டுகளுக்கு பிறகு இருவரின் படங்கள் மோதுவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.