ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு துருவங்கள் பதினாறு என்கிற வித்தியாசமான வெற்றி படத்தை கொடுத்து அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நரகாசுரன் திரைப்படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருக்க, அடுத்தடுத்து அவர் இயக்கிய மாபியா, மாறன் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது ‛நிறங்கள் மூன்று' என்கிற படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். அதர்வா கதாநாயகனாக நடிக்க இரண்டு முக்கிய வேடங்களில் சரத்குமார், ரகுமான் இருவரும் நடித்துள்ளனர்.
ஹைப்பர்லிங்க் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் கிரே என்கிற மூன்று நிறத்துக்கு சொந்தமான குணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்த் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்து விட்டதாக அறிவித்து உள்ளார் கார்த்திக் நரேன். விரைவில் டிரைலர் குறித்த தேதியும் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.