ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பிரகாஷ்ராஜ் நடித்த தோனி படம் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. ஆனாலும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்த பின்னர் தான் இவர் அதிக அளவில் தமிழ் ரசிகர்களை சென்றடைந்தார். அதேசமயம் ஹிந்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்துவரும் ராதிகா ஆப்தே மராத்தி, பெங்காலி உள்ளிட்ட ஆறு மொழிகளில் இதுவரை நடித்துள்ளார், இந்த நிலையில் முதன்முறையாக மலையாள திரையுலகில் மோகன்லால் படத்தில் நடிப்பதன் மூலம் அடியெடுத்து வைக்க இருக்கிறார் ராதிகா ஆப்தே.
ஆம், மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி அடுத்ததாக மோகன்லாலை வைத்து இயக்க இருக்கும் படத்தில் தான் ராதிகா ஆப்தே கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படம் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி உருவாக இருக்கிறதாம். முன்னதாக தற்போது மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.