நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
விஷால் நடித்துள்ள லத்தி படம் நாளை (டிச.,22) தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல ஊர்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பதி சென்ற விஷால் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் பகுதியின் சில...
கேள்வி: உங்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
பதில்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
கேள்வி: வருகிற தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிடுவீர்களா?
பதில்: குப்பம் பகுதியில் எங்கள் குடும்பத்தின் கிரானைட் குவாரி உள்ளது. அந்த பகுதியை நான் நன்கு அறிவேன். அதற்காக குப்பம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தது இல்லை. அரசியலுக்கு வந்துதான் ஒருவர் சேவை செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் தற்போது சினிமாவில் நடிப்பதையே மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு எம்.எல்.ஏ ஆகும் ஆசை இல்லையா?
பதில்: ஒரு எம்.எல்.ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதைவிட எனது படங்கள் மூலம் நான் அதிகம் சம்பாதிக்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு இருக்கும் புகழை விட எனக்கு அதிக புகழ் இருக்கிறது.
கேள்வி: நீங்கள் அரசியல்வாதியா, இல்லையா?
பதில்: சமூக சேவை செய்கிற எல்லோருமே அரசியல்வாதிகள்தான். கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மட்டும் அரசியல்வாதிகள் அல்ல.
கேள்வி: வருங்காலத்தில் அரசியலில் குதித்தால் எந்த மாநில அரசியலில் குதிப்பீர்கள்?
பதில்: கண்டிப்பாக ஆந்திர அரசியலுக்கு வரமாட்டேன்.