உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் |
ராஜா ராணி படத்தில் இயக்குனரான அட்லீ , அதன் பிறகு விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் அட்லீக்கும், நடிகை பிரியாவுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார் அட்லீ. இந்த நிலையில் பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு அட்லீ மற்றும் பிரியாவை வாழ்த்தியுள்ளார். அதோடு அவர்களுக்கு பரிசு ஒன்றையும் கொடுத்து அசத்தினார். இதுதொடர்பான போட்டோ, வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.