22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
கடப்பா : திருப்பதிக்கு மகள் ஐஸ்வர்யா உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி, நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று(டிச., 15) அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மதியம் 12மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவிற்கு சென்றார் ரஜினி. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார். அங்கு தர்கா நடவடிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டவர் பின்னர் நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். ரஜினி, ரஹ்மான் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.