நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தொலைக்காட்சி சீரியல்களில் 2015ம் ஆண்டிலிருந்தே அறிமுகமாகி நடித்து வரும் திவ்யா கணேஷூக்கு சின்னத்திரை ரசிகர்கள் ஏராளம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி', 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திவ்யா இப்போது நடித்து வரும் இரண்டு சீரியல்களிலுமே கேரக்டர் ரோல் தான் செய்து வருகிறார். இருப்பினும் அவருக்கான ரசிகர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சின்னத்திரையிலோ, சினிமாவிலோ திவ்யா விரைவில் ஹீரோயினாக கால்பதிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், திவ்யா கணேஷ் திடீரென 'செல்லம்மா' சீரியலிலிருந்து விலகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மா தொடரில் இதுவரை அவர் நடித்து வந்த மேகா கதாபாத்திரத்தில் தற்போது ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஸ்ரியா சுரேந்திரன் நடித்து வருகிறார்.
செல்லம்மா தொடரின் நாயகன் 'அர்னவ்' குடும்ப பிரச்னையில் சிக்கி சிறை சென்று வந்ததிலிருந்து அந்த தொடரானது டிஆர்பியில் திணறி வருகிறது. இதன் காரணமாகத்தான் திவ்யாவும் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகிறது.