22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தொலைக்காட்சி சீரியல்களில் 2015ம் ஆண்டிலிருந்தே அறிமுகமாகி நடித்து வரும் திவ்யா கணேஷூக்கு சின்னத்திரை ரசிகர்கள் ஏராளம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி', 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திவ்யா இப்போது நடித்து வரும் இரண்டு சீரியல்களிலுமே கேரக்டர் ரோல் தான் செய்து வருகிறார். இருப்பினும் அவருக்கான ரசிகர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சின்னத்திரையிலோ, சினிமாவிலோ திவ்யா விரைவில் ஹீரோயினாக கால்பதிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், திவ்யா கணேஷ் திடீரென 'செல்லம்மா' சீரியலிலிருந்து விலகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மா தொடரில் இதுவரை அவர் நடித்து வந்த மேகா கதாபாத்திரத்தில் தற்போது ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஸ்ரியா சுரேந்திரன் நடித்து வருகிறார்.
செல்லம்மா தொடரின் நாயகன் 'அர்னவ்' குடும்ப பிரச்னையில் சிக்கி சிறை சென்று வந்ததிலிருந்து அந்த தொடரானது டிஆர்பியில் திணறி வருகிறது. இதன் காரணமாகத்தான் திவ்யாவும் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகிறது.