மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தொலைக்காட்சி சீரியல்களில் 2015ம் ஆண்டிலிருந்தே அறிமுகமாகி நடித்து வரும் திவ்யா கணேஷூக்கு சின்னத்திரை ரசிகர்கள் ஏராளம். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலெட்சுமி', 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வந்த திவ்யா இப்போது நடித்து வரும் இரண்டு சீரியல்களிலுமே கேரக்டர் ரோல் தான் செய்து வருகிறார். இருப்பினும் அவருக்கான ரசிகர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சின்னத்திரையிலோ, சினிமாவிலோ திவ்யா விரைவில் ஹீரோயினாக கால்பதிக்க வேண்டும் என்பதும் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில், திவ்யா கணேஷ் திடீரென 'செல்லம்மா' சீரியலிலிருந்து விலகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லம்மா தொடரில் இதுவரை அவர் நடித்து வந்த மேகா கதாபாத்திரத்தில் தற்போது ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஸ்ரியா சுரேந்திரன் நடித்து வருகிறார்.
செல்லம்மா தொடரின் நாயகன் 'அர்னவ்' குடும்ப பிரச்னையில் சிக்கி சிறை சென்று வந்ததிலிருந்து அந்த தொடரானது டிஆர்பியில் திணறி வருகிறது. இதன் காரணமாகத்தான் திவ்யாவும் தொடரிலிருந்து விலகிவிட்டதாகவும் சீரியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகிறது.