ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

2022ம் ஆண்டில் வெளிவந்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' இரண்டு வாரங்களுக்குப் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது. அப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த 2022ம் ஆண்டில் அவருக்கப் பிடித்த சில படங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த ஆண்டில் என்னுடைய அபிமானத் திரைப்படம் புனித் ராஜ்குமார் நடித்த டாகுமென்டரி படமான 'கந்தடா குடி'. அந்தப் படத்துடன் என்னால் எமோஷனலாக தொடர்பு கொண்டதே அதற்குக் காரணம். மறைந்த புனித் ராஜ்குமாரை கடைசியாக திரையில் பார்த்தது எனக்கு ஒரு எமோஷனலான தருணம்.

சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'லவ் டுடே' ஒரு நல்ல படம். அது போல பல கன்னடப் படங்களும் உண்டு. '777 சார்லி' அதில் எனது அபிமானத் திரைப்படம். அப்படத்தை நான் தேர்வு செய்தால் அது என்னுடைய நண்பனின் படம் அதனால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், இந்த வருடத்தின் மிகச் சிறந்த எமோஷனலான படம் அது. கன்னடத் திரையுலகத்திற்கு இப்படியெல்லாம் ஆரம்பமாக 'கேஜிஎப் 2' தான் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.