நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
2022ம் ஆண்டில் வெளிவந்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' இரண்டு வாரங்களுக்குப் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது. அப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த 2022ம் ஆண்டில் அவருக்கப் பிடித்த சில படங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த ஆண்டில் என்னுடைய அபிமானத் திரைப்படம் புனித் ராஜ்குமார் நடித்த டாகுமென்டரி படமான 'கந்தடா குடி'. அந்தப் படத்துடன் என்னால் எமோஷனலாக தொடர்பு கொண்டதே அதற்குக் காரணம். மறைந்த புனித் ராஜ்குமாரை கடைசியாக திரையில் பார்த்தது எனக்கு ஒரு எமோஷனலான தருணம்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'லவ் டுடே' ஒரு நல்ல படம். அது போல பல கன்னடப் படங்களும் உண்டு. '777 சார்லி' அதில் எனது அபிமானத் திரைப்படம். அப்படத்தை நான் தேர்வு செய்தால் அது என்னுடைய நண்பனின் படம் அதனால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், இந்த வருடத்தின் மிகச் சிறந்த எமோஷனலான படம் அது. கன்னடத் திரையுலகத்திற்கு இப்படியெல்லாம் ஆரம்பமாக 'கேஜிஎப் 2' தான் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.