யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
2022ம் ஆண்டில் வெளிவந்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' இரண்டு வாரங்களுக்குப் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது. அப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த 2022ம் ஆண்டில் அவருக்கப் பிடித்த சில படங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த ஆண்டில் என்னுடைய அபிமானத் திரைப்படம் புனித் ராஜ்குமார் நடித்த டாகுமென்டரி படமான 'கந்தடா குடி'. அந்தப் படத்துடன் என்னால் எமோஷனலாக தொடர்பு கொண்டதே அதற்குக் காரணம். மறைந்த புனித் ராஜ்குமாரை கடைசியாக திரையில் பார்த்தது எனக்கு ஒரு எமோஷனலான தருணம்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'லவ் டுடே' ஒரு நல்ல படம். அது போல பல கன்னடப் படங்களும் உண்டு. '777 சார்லி' அதில் எனது அபிமானத் திரைப்படம். அப்படத்தை நான் தேர்வு செய்தால் அது என்னுடைய நண்பனின் படம் அதனால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், இந்த வருடத்தின் மிகச் சிறந்த எமோஷனலான படம் அது. கன்னடத் திரையுலகத்திற்கு இப்படியெல்லாம் ஆரம்பமாக 'கேஜிஎப் 2' தான் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.