மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்சிதா, திடீரென விலகிவிட உடனடியாக சவுந்தர்யா ரெட்டி என்கிற மற்றொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார். சில நாட்களே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த அந்த கன்னடத்து பைங்கிளி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என பலரது மனதிலும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் அவர் அளித்த பேட்டியிலிருந்து தெரியவரும் தகவலின் படி, மோக்சிதா ஏற்கனவே கன்னட மொழியில் செம்பருத்தி சீரியல் ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த தொடர் அங்கே சூப்பர் ஹிட்டாகி வருகிறது. எனவே, மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிக்க அணுகும் போது கூட 15 நாட்கள் மட்டுமே கால் ஷீட் தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கால்ஷீட்டிற்குள் படப்பிடிப்பை நடத்தவில்லையாம். அதுமட்டுமில்லாமல் கன்னட சீரியலின் ஷூட்டிங்கிற்கு கிளம்பி செல்லும் நாட்களில் மீண்டும் நடிக்க அழைத்துள்ளனர். ஒரிரு முறை என்றால் கூட பராவாயில்லை தொடர்ந்து இதையே செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுப்பில் தான் ஒரேடியாக கன்னட சீரியலுக்கே நடிக்க சென்றுவிட்டாராம் மோக்சிதா.