ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த மோக்சிதா, திடீரென விலகிவிட உடனடியாக சவுந்தர்யா ரெட்டி என்கிற மற்றொரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் இணைந்தார். சில நாட்களே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த அந்த கன்னடத்து பைங்கிளி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என பலரது மனதிலும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அவர் விலகியதற்காக காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் அவர் அளித்த பேட்டியிலிருந்து தெரியவரும் தகவலின் படி, மோக்சிதா ஏற்கனவே கன்னட மொழியில் செம்பருத்தி சீரியல் ரீமேக்கில் நடித்து வருகிறார். அந்த தொடர் அங்கே சூப்பர் ஹிட்டாகி வருகிறது. எனவே, மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிக்க அணுகும் போது கூட 15 நாட்கள் மட்டுமே கால் ஷீட் தருவதாக சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த கால்ஷீட்டிற்குள் படப்பிடிப்பை நடத்தவில்லையாம். அதுமட்டுமில்லாமல் கன்னட சீரியலின் ஷூட்டிங்கிற்கு கிளம்பி செல்லும் நாட்களில் மீண்டும் நடிக்க அழைத்துள்ளனர். ஒரிரு முறை என்றால் கூட பராவாயில்லை தொடர்ந்து இதையே செய்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட கடுப்பில் தான் ஒரேடியாக கன்னட சீரியலுக்கே நடிக்க சென்றுவிட்டாராம் மோக்சிதா.