22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்த படம் 'காந்தாரா'. படம் அங்கு வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அக்டோபர் 14ம் தேதி தமிழில் வெளியான இந்தப் படம் இன்றுடன் 50வது நாளைத் தொட்டிருக்கிறது.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் ஓடி வருவது ஆச்சரியம்தான். உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்தாலும் மற்ற மொழிகளில் அதன் வசூலை ஒப்பிடும் போது தமிழ்ப் பதிப்பிற்கான வசூல் குறைவாகத்தான் உள்ளது. இங்கு சுமார் 10 கோடி வரைதான் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மலையாளத்தில் இதைவிடவும் அதிகமாக 15 கோடி வரை வசூலித்துள்ளதாம்.
கன்னடத்தில் தயாரான இந்தப் படத்தைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர். கர்நாடகாவில் பேசப்படும் மற்றொரு மொழியான துளு மொழியிலும் இப்படத்தை டப்பிங் செய்து நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளனர்.