சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
53வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்படுகிறது. நேற்று நடந்த துவக்க விழாவில் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த விருதினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். இதனை மத்திய தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருதை வகீதா ரகுமான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலிம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பரசூன் ஜோஷி ஆகியோர் பெற்றுள்ளனர்.