22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தமிழ் சினிமாவில் ஆர்.கே .செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அதன் பிறகு தமிழ் ,தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீடியாக்களை சந்தித்த அவரிடம், அவரது மகள் அஞ்சு மாலிகாவின் சினிமா அறிமுகம் குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது என்னுடைய மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவளை ஊக்கப்படுத்துவேன். ஆனபோதிலும் எனது மகளுக்கு சினிமாவில் நடிகையாவதை விட விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக உள்ளது. அதனால் என்னுடைய மகள் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ரோஜா.
இதன்மூலம் தனது மகள் சினிமாவில் அறிமுகமாகப்போவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வட்டமடித்து வந்த செய்திகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா.