ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமாவில் ஆர்.கே .செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அதன் பிறகு தமிழ் ,தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீடியாக்களை சந்தித்த அவரிடம், அவரது மகள் அஞ்சு மாலிகாவின் சினிமா அறிமுகம் குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது என்னுடைய மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவளை ஊக்கப்படுத்துவேன். ஆனபோதிலும் எனது மகளுக்கு சினிமாவில் நடிகையாவதை விட விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக உள்ளது. அதனால் என்னுடைய மகள் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ரோஜா.
இதன்மூலம் தனது மகள் சினிமாவில் அறிமுகமாகப்போவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வட்டமடித்து வந்த செய்திகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா.