சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஹரி, அடுத்தபடியாக சூர்யாவுடன் மீண்டும் இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஆறு, வேல், போன்ற படங்களை இயக்கிய ஹரி. அதன்பிறகு சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை இயக்கினார். இதில் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், சிங்கம்-3 எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படத்தை இயக்கிய ஹரி, மீண்டும் சூர்யா நடிப்பில் அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய ஹரி தற்போது இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் சூர்யாவை வைத்து சிங்கம்-4 படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரி கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். சிங்கம் படத்தின் முந்தைய பாகங்களிலிருந்து மாறுபட்ட ஆக்சன் செண்டிமெண்ட் கதையில் அந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் மற்றும் சூர்யா-42, வாடிவாசல் படங்களுக்கு பிறகு சிங்கம்-4 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.