ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஹரி, அடுத்தபடியாக சூர்யாவுடன் மீண்டும் இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஆறு, வேல், போன்ற படங்களை இயக்கிய ஹரி. அதன்பிறகு சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை இயக்கினார். இதில் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், சிங்கம்-3 எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படத்தை இயக்கிய ஹரி, மீண்டும் சூர்யா நடிப்பில் அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய ஹரி தற்போது இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் சூர்யாவை வைத்து சிங்கம்-4 படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரி கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். சிங்கம் படத்தின் முந்தைய பாகங்களிலிருந்து மாறுபட்ட ஆக்சன் செண்டிமெண்ட் கதையில் அந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் மற்றும் சூர்யா-42, வாடிவாசல் படங்களுக்கு பிறகு சிங்கம்-4 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.