மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஹரி, அடுத்தபடியாக சூர்யாவுடன் மீண்டும் இணையப்போவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஆறு, வேல், போன்ற படங்களை இயக்கிய ஹரி. அதன்பிறகு சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை இயக்கினார். இதில் முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்ற நிலையில், சிங்கம்-3 எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
அதன் பிறகு விக்ரம் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படத்தை இயக்கிய ஹரி, மீண்டும் சூர்யா நடிப்பில் அருவா என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதன்பிறகு அருண் விஜய் நடிப்பில் யானை என்ற படத்தை இயக்கிய ஹரி தற்போது இன்னொரு படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் சூர்யாவை வைத்து சிங்கம்-4 படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஹரி கதை தயார் செய்து கொண்டிருக்கிறார். சிங்கம் படத்தின் முந்தைய பாகங்களிலிருந்து மாறுபட்ட ஆக்சன் செண்டிமெண்ட் கதையில் அந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் மற்றும் சூர்யா-42, வாடிவாசல் படங்களுக்கு பிறகு சிங்கம்-4 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.