ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னடத் திரையுலகில் எண்ணற்ற ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகரான புனித் ராஜ்குமார் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். அவருடைய மரணம் இந்தியத் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. விழாவில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஷ்வினி பெற்றுக் கொண்டார்.
கொட்டும் மழையில் நேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் கலந்து கொண்டு கன்னடத்தில் பேசியதற்கு முதலமைச்சர் பசவராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எங்கள் அன்பான அழைப்புக்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதற்காக பெரிய நடிகர்களான ரஜினிகாந்த், ஜுனியர் என்டிஆர் ஆகியோர் வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தினர். என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து அவர்களுக்கு எனது நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் அவரது பேச்சை நிறைவு செய்யும் போது,, “இங்கு தமிழ் மக்களும் வந்திருக்கிறீர்கள். என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் என்னுடைய வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி, வணக்கம்,” என்று தமிழிலும் பேசி தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.