ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

பெங்களூரு : கன்னட திரையுலகின் 'ஸ்டார்' நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டவர். 2021 அக்டோபர் 29ல், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் இந்தியத் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடகா ரத்னா' விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடந்தது. புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஷ்வினி பெற்றுக் கொண்டார்.
இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசியதாவது : புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அது அவர் நடிகர் என்பதால் வந்த கூட்டம் அல்ல அவரது மனிதாபிமானம், ஆளுமைக்காக வந்த கூட்டம். அவர் கடவுளின் குழந்தை. ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.