அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. இந்த படத்தில் கதாநாயகியான கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை அபர்ணா வினோத். இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த ரினில்ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது தெரிகிறது.
மலையாளத்தில் 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா வினோத், அதைத்தொடர்ந்து கோகினூர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் பைரவா படத்தில் நடித்தார். பின்னர் கடந்த வருடம் தமிழில் வெளியான நடுவண் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.