அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் தயாராகி தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வசூலைக் குவித்த படம் 'புஷ்பா'.
இரண்டு பாகங்களாக வரும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு மேலும் தள்ளி வைக்கப்பட்டுளளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் போட்டோ ஷுட் வேலைகள் ஆரம்பமாகின. அக்டோபர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் நவம்பர் கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
முதல் பாகம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான நிலையில் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை. முதலில் திரைக்கதை உருவாக்கத்தால் தாமதமானது. தற்போதைய தாமதத்திற்கு திருப்தியான லொகேஷன்கள் கிடைக்கவில்லை என்று தகவல். இதனால், பகத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் தங்களது தேதிகளை மீண்டும் மாற்றித் தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2023ல் இரண்டாம் பாகம் வெளியாவது சந்தேகம்தான், 2024 துவக்கத்தில் வேண்டுமானால் வெளியாகலாம்.