மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. கலை, அரசியலை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டினார். படத்தை பார்த்துவிட்டு, "தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் அதிகம். ஹோம்பேல் பிலிம்ஸை விட யாராலும் இதை சிறப்பாக சொல்ல முடியாது. காந்தாரா என் மனதை நெகிழ வைத்தது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைசிறந்த படைப்பில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இது இந்திய சினமாவின் மாஸ்டர்பீஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.