39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
கன்னட மொழியில் வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. கலை, அரசியலை சேர்ந்த பலரும் படத்தை பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் ரஜினிகாந்தும் மனம் திறந்து பாராட்டினார். படத்தை பார்த்துவிட்டு, "தெரிந்தவர்களை விட தெரியாதவர்கள் அதிகம். ஹோம்பேல் பிலிம்ஸை விட யாராலும் இதை சிறப்பாக சொல்ல முடியாது. காந்தாரா என் மனதை நெகிழ வைத்தது. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். இந்த தலைசிறந்த படைப்பில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இது இந்திய சினமாவின் மாஸ்டர்பீஸ்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி, "அன்புள்ள ரஜினிகாந்த் சார், நீங்கள் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். நான் சிறுவயதில் இருந்தே உங்கள் ரசிகன். உங்களின் பாராட்டால் என் கனவு நனவானது. இது போன்ற உள்ளூர் கதைகளை செய்ய நீங்கள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள். நன்றி சார்" என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். படம் பற்றிய அவரது ஆச்சர்யங்களை ரிஷப் ஷெட்டியுடன் பகிர்ந்து கொண்டார். அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினார். ரிஷப் ஷெட்டியும் ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.