ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதே திரைப்பட விழா, கோவாவில் நடக்கும் விழா. இந்த ஆண்டுக்கான 53வது சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அந்தந்த ஆண்டு வெளியான 25 சிறப்பான திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டு விழாவில் 3 தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது. த.செ ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்கள் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு விழாவில் திரையிடப்பட உள்ளன.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ.கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த படங்களில் 20 படங்களை தேர்வு செய்துள்னர். இதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேசிய நீரோட்ட திரைப்படப் பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.