ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமாவில் 2 கே கால கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜோதிகா. பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சூர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை விட்டு சில காலம் விலகியிருந்தார். குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். அவருக்குப் பொருத்தமான நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நேற்று ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் மலையாளப் படமான 'காதல் - த கோர்' என்ற படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. மலையாள நடிகர் மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை ஜோ பேபி இயக்குகிறார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்க ஜோதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ஜோதிகா நடிக்கும் மூன்றாவது மலையாளப் படம் இது. இதற்கு முன்பு 'ராக்கிலிபட்டு, சீதா கல்யாணம்' ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வையை ரிடுவீட் செய்து, “முதல் நாளிலிருந்தே, இந்தப் படத்தின் ஐடியா, அடுத்தடுத்து நகர்வுகள் ஆகியவற்றை இயக்குனர் ஜோ பேபி மற்றும் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். மம்முக்கா, ஜோதிகா ஆகியோருக்கு எனது வாழ்த்துகள், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜோ” எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார் சூர்யா. இவரது வாழ்த்துக்கு மம்முட்டியும் நன்றி தெரிவித்துள்ளார்.