Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காற்றாலை பின்னணியில் உருவாகியுள்ள மிரள்

10 அக், 2022 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Miral-Based-on-Wind-Turbines

பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் மிரள். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: பரத்தும், வாணி போஜனும் கணவன், மனைவி, அவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னையில் வாழும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது. இதனால் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபடுவதற்காக தென்காசிக்கு வருகிறர்கள். பூஜை முடிந்து அந்த பகுதியில் கள்ள காற்றாலை வழியாக இரவு நேரத்தில் திரும்புகிறார்கள்-. அப்போது அவர்களுக்கு ஏற்படும் திரிலான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதுவரை காற்றாலை பின்னணியில் எந்த படமும் வந்தில்லை. 24 நாள் வரை காற்றாலை பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை செட் போட்டு படமாக்கினோம். வித்தியாசமான த்ரிலர்லர் அனுபவமாக படம் இருக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்திய படங்களில் வெளிநாட்டு நடிகைகள் பங்கேற்பது ஆரோக்கியமானது: எவ்லி அவ்ரம்இந்திய படங்களில் வெளிநாட்டு ... 20 நாளில் ஓடிடியில் வெளியாகும் டிரிக்கர் 20 நாளில் ஓடிடியில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)