சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் பலர் நடிப்பில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் முன்பதிவு இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளன. மேலும், அடுத்த மூன்று நாட்களுக்கும் முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பள்ளிகளின் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை தினம் என்பதாலும், விஜயதசமி விடுமுறை வருவதாலும் பலரும் படத்தைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். நாவலைப் படித்த ஒவ்வொருவருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது.
படத்திற்கான பிரமோஷன் மிகவும் குறைவாக உள்ளது என்று விமர்சனம் எழுந்த நிலையில் படக் குழுவினர் கடந்த சில நாட்களாக மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என படத்தை பிரமோஷன் செய்து வருகின்றனர்.
தமிழில் மட்டுமே இந்த முன்பதிவு சிறப்பாக இருந்து வருகிறது. இன்னும் பல தியேட்டர்களில் முன்பதிவு ஆரம்பமாகவில்லை. இன்றும், நாளையும் ஆரம்பமாக உள்ளது. படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால் தமிழில் முதல் நாள் வசூலாக புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மொழிகளில் முன்பதிவு ஆரம்பமான நிலையில், அங்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் கூட நடக்கவில்லை.