'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
ஒருகாலத்தில் சீரியல் நடிகர்கள் என்றாலே சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள், திறமையில்லாதவர்கள் என்று தான் பலரும் கருதி வந்தனர். ஆனால், இன்று சின்னத்திரை நட்சத்திரங்களில் வளர்ச்சியானது சினிமா நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அபரிமிதமாக உள்ளது. ஒரு ப்ராஜெக்டில் நடித்தவர்கள் கூட கார், வீடு என செட்டிலாகி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சுபாஷும் இடம்பிடித்துள்ளார். 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் அதே சேனலின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீடியா கேரியரில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள அவர், மோரிசன் கேரேஜ் கார் கம்பெனியின் ஏ-ஸ்டார் என்கிற சொகுசு வகை காரை வாங்கி தனது முதல் கனவை நனவாக்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை பதிவிட்டுள்ள ஆர்த்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவரது கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.