யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சார்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்பகட்டத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினார் என கூறியுள்ளார்.