யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, முன்னணி நாயகியாக திகழ்ந்தார். சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்து 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வித்யாசாகர் காலமானார். இதனிடையே நேற்று ஜூலை 12ம் தேதி மீனா மற்றும் வித்யாசாகரின் 13வது திருமண நாளாகும். இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு போட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛நீ என் வாழ்வில் வானவில் போல வந்து என் வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய். சேர்ந்து இருப்பதுதான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடம் அதுதான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என மீனா பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.