ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, முன்னணி நாயகியாக திகழ்ந்தார். சமீபகாலமாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்து 2009ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் தெறி படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக வித்யாசாகர் காலமானார். இதனிடையே நேற்று ஜூலை 12ம் தேதி மீனா மற்றும் வித்யாசாகரின் 13வது திருமண நாளாகும். இந்த நிலையில் மீனா கடந்த ஆண்டு போட்ட ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், ‛‛நீ என் வாழ்வில் வானவில் போல வந்து என் வாழ்க்கையை மிகவும் வண்ணமயமாக்கினாய். சேர்ந்து இருப்பதுதான் அற்புதமானது. எனக்கு பிடித்த இடம் அதுதான். நீ கொடுத்த புன்னகையை எப்போதும் அணிந்திருப்பேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என மீனா பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது.