நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பிரபல பெண் கானா பாடகரான இசைவாணி சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பற்றிய தனிப்பட்ட விவகாரங்கள் எதுவும் முதலில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் இசைவாணியை பலரும் அறிவர். இசைவாணிக்கு முதலில் திருமணம் ஆகியிருந்த நிலையில், அவர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவகாரத்து செய்திருந்தார். இசைவாணி தனது விவகாரத்து குறித்து பிக்பாஸில் பாவ்னி ரெட்டியிடம் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இசைவாணி அளித்துள்ள பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'கானா பாடல் பாட என் வீட்டில் எனக்கு இருந்த ஆதரவு என் கணவர் வீட்டில் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் என் கணவரை விவாகரத்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.