யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழில் அதிகப் படங்களில் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்தடுத்து, “இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு 'கோப்ரா' பட இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் பாடல்களை நேரடி இசை நிகழ்ச்சியாக மேடையில் தனது குழுவினர்களுடன் வழங்கினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த விழாவை நின்று கொண்டே ரசித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் விடியற்காலையில் தனது சமூக வலைத்தளங்களில் திடீரென ஒரு புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அதை எதற்காகப் பதிவிட்டார் என்பதும் தெரியவில்லை. தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் அது. அவர்களது பெயரை மட்டும் குறிப்பிட்டு அந்தப் புகைப்படைத்தைப் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நான்கு இசை மேதைகள் உள்ள அந்த புகைப்படம் ஒரு பொக்கிஷம் என ரசிகர்கள் பலரும் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.