யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
பிரித்விராஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்துள்ள மாஸ் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது கடுவா திரைப்படம். இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்... இதற்கு முன்னதாக தான் இயக்கிய லூசிபர் படத்தின் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகிற்கு விவேக் ஓபராயை அழைத்து வந்து வில்லனாக்கியவர் பிரித்விராஜ் தான். வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.
அப்படி கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விவேக் ஓபராய் பேசும்போது, “இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பயங்கரமாக இருந்தது. பிரித்விராஜை திறமையின் பவர் ஹவுஸ் என்று சொல்வேன். அவர் ஆடுகிறார், பாடுகிறார், நடிக்கிறார், படம் இயக்குகிறார், தயாரிப்பாளராக இருக்கிறார்.. என்ன வேலை தான் அவர் செய்யவில்லை..! படப்பிடிப்பில் எங்களை எல்லாம் மீறி ஏதாவது ஒரு விஷயம் செய்து அசத்தி விடுவார். அதுதான் எங்களை பயப்படுத்தும். அவ்வளவு ஏன் பெண் வேடம் போட்டால் சம்யுக்தாவின் கதாபாத்திரத்தை கூட அவரை நடித்து விடுவார்.. அவரை கேரளாவின் கமல்ஹாசன் என்று தான் நான் சொல்வேன்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.