மே 9ல் வெளியாகும் ராயன் முதல் பாடல் | ‛மணி இன் தி பேங்க்' : யுவன் வெளியிட்ட ஆல்பம் | ஏற்காட்டுக்கு ஜாலி டூர் கிளம்பிய நடிகர்கள் | மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கேரள நர்ஸ் வீட்டிற்கு சென்று டாக்குமென்ட்ரி படம் எடுத்த ஐஸ்வர்யா ரஜினி | பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் |
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையடுத்து கனெக்ட் மற்றும் காட்பாதர், கோல்ட், ஹிந்தியில் அட்லி இயக்கும் படம் என பிஸியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அதோடு விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். மேலும், சாய் வாலா என்கிற டீ நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வரும் நயன்தாரா, கடந்த மாதத்தில் தனது தோழியுடன் இணைந்து டி லிப் பாம் கம்பெனி என்கிற அழகுசாதன பொருள் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது துபாயில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் எண்ணெய் பிசினஸ் செய்ய நயன்தாரா முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான ஆலோசனை நடத்தவே கடந்த புத்தாண்டு தினத்தின் போதும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் துபாய் நாட்டுக்கு சென்றதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆக, சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர் என்று செயல்பட்டு வரும் நயன்தாரா தற்போது பல பிசினஸ்களிலும் முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்.