Advertisement

சிறப்புச்செய்திகள்

விடாமுயற்சி படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகிறது | குழந்தையின் தாய் தற்கொலை : மனிதநேயம் இறந்து கொண்டிருப்பதாக நடிகை கல்யாணி ஆதங்கம் | 'ராமாயணா' - படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு ? | உங்கள் எதிர்பார்ப்பே என் எதிர்பார்ப்பு தனுஷூடன் அந்தோனி தாசன் | 5 மொழிகளில் ரீமேக் ஆகும் பார்கிங் திரைப்படம் | டிரான்சில்வேனியா திரைப்பட விழாவில் கொட்டுக்காளி | மம்முட்டியின் பிரம்மயுகத்தை தனியாக பார்க்க மாட்டேன் : ஷோபிதா துலிபாலா | பவன் கல்யாண் படத்தில் தபுவுக்கு பதிலாக ஸ்ரேயா ரெட்டி | டர்போ படத்தின் கதையே கதாநாயகி மீது தான் நகரும் : மம்முட்டி உறுதி | பஹத் பாசிலின் ஆவேசத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய மும்பை போலீஸ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள்

10 ஜூன், 2023 - 12:15 IST
எழுத்தின் அளவு:
Dileep-film-work-delayed-by-Mohanlal-film

மலையாள நடிகர் திலீப் ஒரு பக்கம் நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம், போலீஸ் விசாரணை என பல இக்கட்டான தருணங்களை எதிர்கொண்டு வந்தாலும், இன்னொரு பக்கம் தனது சினிமா பயணத்தில் தொய்வு ஏற்பட்டு விடாமல் சீரான இடைவெளியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பாந்த்ரா மற்றும் வாய்ஸ் ஆப் சத்தியநாதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் திலீ ப் நடிகை வழக்கில் சிக்கி சிறை செல்வதற்கு முன்பாகவே நடிக்க ஒப்புக்கொண்ட இரண்டு சயின்ஸ் பிக்சன் படங்கள் தான் பறக்கும் பாப்பன் மற்றும் புரபசர் டிங்கன் ஆகியவை.

இந்த படங்களில் புரபசர் டிங்கன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நடத்தப்பட வேண்டி இருக்கிறதாம். அதே சமயம் 3டியில் உருவாகும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நீண்ட நாட்களாகவே தேங்கி நிற்பதால் தான் இந்த படம் முடிவடைய தாமதம் ஆகிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதற்கு காரணம் தற்போது நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்குனராக மாறி 3டியில் அவர் இயக்கி உள்ள பாரோஸ் படத்தின் தொழில்நுட்ப பணிகளையும் இந்த புரொபஷர் டிங்கன் படத்தில் பணியாற்றி வந்த குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர். அதனால் பாரோஸ் படத்தின் பணிகளை முடித்து விட்ட பின்னரே திலீப்பின் படத்தில் அவர்கள் பணியாற்ற துவங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் வரும் 2024ல் இந்த படம் வெளியாகிவிடும் என்றும் படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன்சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் ... சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)