ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
எண்பது தொண்ணூறுகளில் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள், வருடத்திற்கு ஒருமுறை ஒன்றாக சந்தித்து தங்களது நினைவுகளை பரிமாறிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதேசமயம் இவர்களில் ஒருவர்கூட தங்களது கல்லூரி கால நண்பர்களை சந்தித்து அளவளாவியது போன்று இதுவரை செய்திகள் எதுவும் வெளியானதில்லை. ஆனால் தற்போது நடிகர் மம்முட்டி சமீபத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் தனது கல்லூரி கால நண்பர்களுடன் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் பி.ஏ., படித்த மம்முட்டி, அப்போது தன்னுடன் படித்த பலரையும் இந்த நிகழ்வில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து வெளியான புகைப்படங்களில், நண்பர்கள் கூட்டத்தில் மம்முட்டி ஒருவரே மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார். 70 வயது ஆனாலும் என்றும் மார்க்கண்டேயன் என்கிற பட்டத்துக்கு மம்முட்டி தான் மிகச் சரியான நபர் என்றுதான் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது தோன்றுகிறது.