'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், முதன்முறையாக டி.வி. நிகழ்ச்சி ஒன்றை எடுத்து, நடத்தி வருகிறார். சத்தியமேவ ஜெயதே எனும் பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சமுதயாத்தில் நிலவும் பிரச்னைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
சமீபத்தில் மருத்துவதுறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அமீர்கான். கடந்த மே மாதம் 27ம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்க மருத்துவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று மருத்துவத் துறையில் உள்ள முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்சசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு இந்திய மருத்துவக் கழகம், ஆமீர் கான் தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியது. ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மருத்துவதுறை முறைகேடு குறித்து ராஜ்யசபாவில் பேச, பா.ஜ.க., எம்.பி., சாந்த குமார் அமீர்கானுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட அமீர்கான், வருகிற 21ம் தேதி ராஜ்சபாவில் பேச இருக்கிறார். அமீருடன் சத்தியமேவ ஜெயதே குழுவினரும் செல்ல இருக்கின்றனர்.