இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபகாலமாக டப்பிங் தொடர்களுக்கு மவுசு குறைந்து நேரடி தமிழ் தொடர்கள் அதிகரித்து வருகிறது. எல்லா சேனல்களும் போட்டி போட்டு புதிய தொடர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் நேற்று முதல் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி என இரண்டு தொடர்களை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது.
இரண்டு தொடர்களுமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. பூவே பூச்சூடவா இரவு 8 மணிக்கும், யாரடி நீ மோகினி இரவு 8.30 மணிக்கும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது. இரண்டுமே பெண்களை மையமாக கொண்ட தொடர்கள். பூவே பூச்சூடவா நதியா நடிக்க பாசில் இயக்கிய திரைப்படத்தின் டைட்டில். யாரடி நீ மோகினி தனுஷ், நயன்தாரா நடித்த படத்தின் டைட்டில். இரண்டு வெற்றிப்பட டைட்டில்களுடன் ஒளிபரப்பாகும் தொடர்களை நேயர்கள் வெற்றி பெற வைப்பார்களா? என்பது இன்னும் சில வாரத்தில் தெரிய வரும்.