நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' | பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார் | ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் |
ஜெமினி திரைப்படத்தில் "ஓ" போட்ட விக்ரம், இப்போது "பி" போட சொல்லி பிரச்சாரம் பண்ணும் ரகசியம் இதுதான்! அதாகப்பட்டது, உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி சென்னை, மியாட் மருத்துவமனையில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானபேருக்கும், இலவச "ஹெபடைட்டிஸ்-பி" எனும் மஞ்சள்காமாலை தடுப்பூசி போடப்பட்டது. கூடவே லிவ்பார்லைப் எனும் "ஹெபடைட்டிஸ் - பி" தொற்று நோய்க்கு எதிரான மஞ்சள் ரிப்பன் பிரச்சாரத்தையும், இந்த தடுப்பூசி போடும் வைபவத்தையும் தொடங்கி வைக்க வருகை தந்திருந்தார் நடிகர் விகரம்.
அப்போது பேசிய நடிகர் விக்ரம், மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ் அவர்களால் தான், இன்று உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். அவர்தான் எனது ஃபேமிலி டாக்டர். ஒரு விபத்தில் பாதிப்பிற்கு உள்ளானபோது, என்னை காபாற்றி மறுபிறவி கொடுக்க வைத்தவர். அவர் அழைத்ததும் இங்கு, இந்த நல்ல காரியத்திற்காக உடனே ஓடி வந்தேன். ஆனால் அவரே என்னை டாக்டர் விக்ரம் என்று அழைப்பதும், பிஸி ஷெட்யூலில் நான் இங்கு வந்திருப்பதாக இங்கு பேசும் போது கூறியதும் எனக்கு பெருமையாக இருக்கிறது. அதேநேரம் நான் எந்த பிஸி ஷெட்யூலிலும் இல்லை. டாக்டர் அழைத்தால் எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிவரத்தயார்.
ஜெமினி படத்தில் கமர்ஷியலாக ஓ போடு என்றேன், அது பிரபலமானது. இன்று எனது டாக்டர் கூறுவதை கேட்டு எல்லோரது உயிரையும் காக்க பி (ஹெபடைட்டிஸ் -பி) போடுங்கள் என்கிறேன். அவ்வளவுதான்! என்று பி போடு ரகசியத்தை போட்டுடைத்தார். விழாவில் மியாட் மருத்துவமனை சேர்மன் மல்லிகா மோகன்தாஸ், டாக்டர்கள் அருள்பிரகாஷ், தினேஷ் ஜோதிமணி, ஜார்ஜ் எம்.சண்டி, மனோஜ் குமார் உள்ளிட்ட மருத்துவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.