ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா குமார், மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கிறார். நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர். பாரிஜாதம் தொடரில் வில்லியாக நடித்தவர் தற்போது தெய்வமகளில் வில்லியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 40 தொடர்களிலும், மலையாளத்தில் 10 தொடர்களிலும் வில்லியாக நடித்த ரேகா குமார், சின்னத்திரையின் நிரந்தர வில்லி. தொடர்ந்து வில்லி வேடங்களில் தினமும் நடிப்பதால் வீட்டிற்கு சென்றாலும் வில்லி மூடுதான் இருக்கிறதாம். இதனால் வில்லி கேரக்டர்களின் எபெக்ட் வீட்டுக்குள் வராமல் இருக்க தினமும் காலை மலையில் தியானம் செய்கிறார். தற்போது அது நல்ல பலன் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேகா குமார்.