நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது கல்யாண பரிசு சீரியலில் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பயங்கரமான வில்லனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் பாவமன்னிப்பு, உணர்வுகள் தொடர்களில் நடித்து விட்டு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ.
இவர்கள் இருவருக்கும் இன்று புதன்கிழமை (20-1-2016) காலை 6 மணி முதல் 7.15-க்குள் சென்னை திருவான்மியூரில் உள்ள கிருஷ்ண மந்திரம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது ஒரு காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.
இதையடுத்து, ஜனவரி 30-ந்தேதி ஈஸ்வர்- ஜெயஸ்ரீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், இயக்கு னர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.