அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது கல்யாண பரிசு சீரியலில் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பயங்கரமான வில்லனாகவும் நடித்து வருகிறார். அதேபோல் பாவமன்னிப்பு, உணர்வுகள் தொடர்களில் நடித்து விட்டு தற்போது ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ.
இவர்கள் இருவருக்கும் இன்று புதன்கிழமை (20-1-2016) காலை 6 மணி முதல் 7.15-க்குள் சென்னை திருவான்மியூரில் உள்ள கிருஷ்ண மந்திரம் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரது மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது ஒரு காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்.
இதையடுத்து, ஜனவரி 30-ந்தேதி ஈஸ்வர்- ஜெயஸ்ரீயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள், இயக்கு னர்கள், தயாரிப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.