20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்து வந்த சந்தியா மற்றும் ப்ரிட்டோ மனோ இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு இருவருமே விலகிவிட்டனர். இதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணமானது இந்து, கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சந்தியா - ப்ரிட்டோ மனோவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.