போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்து வந்த சந்தியா மற்றும் ப்ரிட்டோ மனோ இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு இருவருமே விலகிவிட்டனர். இதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணமானது இந்து, கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சந்தியா - ப்ரிட்டோ மனோவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.