எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

'எதிர்நீச்சல்' தொடரில் அண்மையில் அருண் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் சாணக்யன். முன்னதாக ஜீ தமிழின் 'கண்ணத்தில் முத்தமிட்டால்' தொடரில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார். சின்னத்திரையில் இவரை பார்க்கும் நேயர்கள் பலரும் இவரை எங்கேயோ பார்த்த முகமாயிருக்கிறதே? என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது தான் அதற்கான பதில் கிடைத்துள்ளது. சாணக்யன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார்.
சூர்யா- அசீன் நடிப்பில் வெளியான கஜினி படத்தில் தான் சாணக்யா குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து மம்முட்டியுடன் 'ஒரு காதல்', அஜித்துடன் 'பரமசிவன்' மற்றும் 'சக்கரவியூகம்' உட்பட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சின்னத்திரையில் 'மெட்டி ஒலி' தான் சாணக்யனுக்கு முதல் சீரியல். இதை நடிகர் சாணக்யனே தனது இன்ஸ்டாவில் வீடியோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார். இதைபார்த்த ரசிகர்கள் பலரும் 'அந்த சின்ன பையனா இப்படி வளர்ந்துட்டார்?' என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். தவிரவும் சாணக்யன் பிரபல சீரியல் நடிகை கீதா சரஸ்வதியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.