இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஸ்ரீநாத் பாஷி என்பவர் ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றபோது அங்கிருந்த தொகுப்பாளினியை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டினார் என்ற செய்தி வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை கிளப்பியது. இந்தநிலையில் நடிகர் ஸ்ரீநாத் பாஷி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்லால் நடிப்பில் வெளியான பிரணயம் என்கிற படத்தின் மூலம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகமான ஸ்ரீநாத் பாஷி, பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கும்பலாங்கி நைட்ஸ், நிவின்பாலியுடன் ஜேக்கப்பிண்டே சொர்க்க ராஜ்ஜியம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனிக்கத்தக்க நடிகராக மாறினார்
இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இவர் கதாநாயகனாக நடித்துள்ள சட்டம்பி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டிக்காக கலந்து கொண்டார் ஸ்ரீநாத் பாஷி. அப்போது தொகுப்பாளர் தன்னை எரிச்சலூட்டும் விதமாக கேள்வி கேட்டதால் கோபமான ஸ்ரீநாத் பாஷி, கேரமாவை ஆப் செய்ய சொல்லிவிட்டு, அவரை அவதூறான வார்த்தைகளால் விமர்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து பின்னர் மன்னிப்பு தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் ஸ்ரீநாத் பாஷி. இந்தநிலையில் போலீசார் அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.. அதைத் தொடர்ந்து நேரில் சென்று, போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார் பின்னர் ஸ்ரீநாத் பாஷி. அரைமணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.




